Wednesday, December 23, 2009
நாளை முதல்..
நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.
நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.
இன்று கல்லூரியின் கடைசி நாள்..
Saturday, November 21, 2009
Sunday, November 15, 2009
மல்லிகையும் மட்டனும்
Sunday, November 8, 2009
Thursday, November 5, 2009
ஏன்..
காலையில்
பூக்கள் மலர்ந்திடும்
புதுச்சோலையில் உலவிடலாம்..
சிட்டுக் குருவிகளுக்கு
உணவு தந்திடலாம்
அவை கொத்திதின்பதை
பார்த்து ரசித்திடலாம்..
தூரல் போடும்
சாரல் மழையில்
மெல்ல நனைந்திடலாம்..
மாலையில்
மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு
வானத்திற்கு
மனதை தன்திடலாம்..
இரவின் நிலவில்
மெல்லிய இசை கேட்டு
உறங்கிடலாம்..
இத்துணை இன்பம்
இப்பூமியில் கொட்டிக்கிடக்க
கத்திகளுடனும்
துப்பாக்கிகளுடனும்
அலைவதேன் மானிட இனமே..
பூக்கள் மலர்ந்திடும்
புதுச்சோலையில் உலவிடலாம்..
சிட்டுக் குருவிகளுக்கு
உணவு தந்திடலாம்
அவை கொத்திதின்பதை
பார்த்து ரசித்திடலாம்..
தூரல் போடும்
சாரல் மழையில்
மெல்ல நனைந்திடலாம்..
மாலையில்
மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு
வானத்திற்கு
மனதை தன்திடலாம்..
இரவின் நிலவில்
மெல்லிய இசை கேட்டு
உறங்கிடலாம்..
இத்துணை இன்பம்
இப்பூமியில் கொட்டிக்கிடக்க
கத்திகளுடனும்
துப்பாக்கிகளுடனும்
அலைவதேன் மானிட இனமே..
Subscribe to:
Posts (Atom)