Thursday, February 25, 2010

அலைவீசும் கடலோரம்..


அலைவீசும் கடலோரம்
அமரும்போதும்
உந்தன்
அருகாமை ஏக்கம்..

மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை
பார்க்கும்போதும்
உந்தன்
புன்னகைத் தாக்கம்..

உந்தன் பேச்சு
உந்தன் முகம் என்று
உள்ளம் முழுதும் உன்
நினைவுத் தேக்கம்..

காலை மாலை
செய்யும் செயல்களை
தினம்
தடுமாற வைக்கும்..

Wednesday, February 3, 2010

நீ வரும் வழியில்..


நீ
வரும் வழியில்
காத்திருக்கிறேன்..
என்னைப் போலவே
இங்குள்ள
செடிகளும்
மலர்களும்
மலரின் இதழ்களும்
உன் இதழ் சிரிப்பைக் காண…