Saturday, April 17, 2010

நியாயமா...மானிடா...?

மேகம் தந்தேன்
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..

உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...

செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..

இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..

தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?