Monday, August 9, 2010

எங்கள் இந்தியா..


"சாதிகள் இல்லையடி பாப்பா"
இது வகுப்பறையில்..
"நீங்கள் எந்த ஜாதி"
இது அட்மிஷன் அறையில்..

"வரதட்சணையை ஒழிப்போம்"
இது மேடைப் பேச்சில்..
"எத்தனை சவரன் போடுவீர்கள்"
இது பெண் பார்க்கும் வீட்டில்..

"தீண்டாமை ஒரு பாவச்செயல்"
இது பள்ளிபாட புத்தகத்தில்..
"இருவகை குவளைகள்"
இது எங்கள் ஊர் தேநீர் கடைகளில்..

எனினும் நாங்கள்
பெருமையாக(பொய்யாக) சொல்வோம்
வேற்றுமையில் ஒற்றுமை
இதுதான் எங்கள் இந்தியா..

Monday, June 28, 2010

வார்த்தைகளைத் தேடுகிறேன்…


அழகாய் பேச
தமிழில்
ஆயிரம் வார்த்தைகள்
இருந்தும்
ஒன்று கூட
கிடைப்பதில்லையே
நீ
அருகினில்
இருக்கும் பொழுது…

Saturday, April 17, 2010

நியாயமா...மானிடா...?

மேகம் தந்தேன்
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..

உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...

செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..

இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..

தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?

Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் பாதையில்..


வாழ்க்கையின்
பாதையில்
வந்து போகின்றனர்
பலர்..

நீங்கா நினைவுகளை
நெஞ்சில்
விட்டுச் செல்கின்றனர்
சிலர்...

Thursday, March 4, 2010

என் இதய வானில்..


என் இதய வானில்
அன்பெனும் பறவைகள்..

என் இதய கடலில்
அன்பெனும் அலைகள்..

என் இதய தோட்டத்தில்
அன்பெனும் மலர்கள்..

என் இதய வீட்டில்
அன்பு நிறைந்த மனிதர்கள்..

Thursday, February 25, 2010

அலைவீசும் கடலோரம்..


அலைவீசும் கடலோரம்
அமரும்போதும்
உந்தன்
அருகாமை ஏக்கம்..

மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை
பார்க்கும்போதும்
உந்தன்
புன்னகைத் தாக்கம்..

உந்தன் பேச்சு
உந்தன் முகம் என்று
உள்ளம் முழுதும் உன்
நினைவுத் தேக்கம்..

காலை மாலை
செய்யும் செயல்களை
தினம்
தடுமாற வைக்கும்..

Wednesday, February 3, 2010

நீ வரும் வழியில்..


நீ
வரும் வழியில்
காத்திருக்கிறேன்..
என்னைப் போலவே
இங்குள்ள
செடிகளும்
மலர்களும்
மலரின் இதழ்களும்
உன் இதழ் சிரிப்பைக் காண…