Sunday, July 5, 2020
Tuesday, March 31, 2020
Wednesday, March 7, 2018
Friday, January 6, 2017
போதும் பொண்ணு..
கல்விக்கு ஸரஸ்வதி
செல்வத்துக்கு லஷ்மீ
வீரத்துக்கு மலைமகளென
பெண் தெய்வங்களைப் போற்றும்
இந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•‘மாதராய்ப் பிறந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்’
போற்றிய கவிஞர்
பிறந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•தேனினும் இனிய குரலுடையாள்
'தேன்மொழி'
கார்முகில் என
கருங்கூந்தல் உடையாள்
'கார்குழலி'
மதிமுகம் கொண்ட பெண்
'மதிவதனி'
என்றெல்லாம் இனிய பெயரிட்ட
இந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•தாய்மையை
அண்ணன் தங்கை பாசத்தை
தாய்மாமன் என்று உறவுகளை
போற்றுகின்ற
புனித இத்தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•பிற நாடுகளெல்லாம்
'தந்தை நாடு' எனும்போது
தன் தேசத்தை
'தாய்நாடு' என்றும்
தன் மொழியை
'தாய்மொழி' என்றும்
போற்றுகின்ற
புனித இத்தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•பெண்மையைப் போற்றுவோம்
பெண்ணின் மேன்மையைப்
போற்றுவோம்..
பாரத மாதாவின்
மனம் குளிர்ந்திட
வரலாற்றிலிருந்து
நீக்குவோம் இப்பெயரை
'போதும் பொண்ணு'..
- வைகறை நிலா
செல்வத்துக்கு லஷ்மீ
வீரத்துக்கு மலைமகளென
பெண் தெய்வங்களைப் போற்றும்
இந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•‘மாதராய்ப் பிறந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்’
போற்றிய கவிஞர்
பிறந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•தேனினும் இனிய குரலுடையாள்
'தேன்மொழி'
கார்முகில் என
கருங்கூந்தல் உடையாள்
'கார்குழலி'
மதிமுகம் கொண்ட பெண்
'மதிவதனி'
என்றெல்லாம் இனிய பெயரிட்ட
இந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•தாய்மையை
அண்ணன் தங்கை பாசத்தை
தாய்மாமன் என்று உறவுகளை
போற்றுகின்ற
புனித இத்தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•பிற நாடுகளெல்லாம்
'தந்தை நாடு' எனும்போது
தன் தேசத்தை
'தாய்நாடு' என்றும்
தன் மொழியை
'தாய்மொழி' என்றும்
போற்றுகின்ற
புனித இத்தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..
•பெண்மையைப் போற்றுவோம்
பெண்ணின் மேன்மையைப்
போற்றுவோம்..
பாரத மாதாவின்
மனம் குளிர்ந்திட
வரலாற்றிலிருந்து
நீக்குவோம் இப்பெயரை
'போதும் பொண்ணு'..
- வைகறை நிலா
Monday, October 10, 2011
Monday, August 9, 2010
எங்கள் இந்தியா..

"சாதிகள் இல்லையடி பாப்பா"
இது வகுப்பறையில்..
"நீங்கள் எந்த ஜாதி"
இது அட்மிஷன் அறையில்..
"வரதட்சணையை ஒழிப்போம்"
இது மேடைப் பேச்சில்..
"எத்தனை சவரன் போடுவீர்கள்"
இது பெண் பார்க்கும் வீட்டில்..
"தீண்டாமை ஒரு பாவச்செயல்"
இது பள்ளிபாட புத்தகத்தில்..
"இருவகை குவளைகள்"
இது எங்கள் ஊர் தேநீர் கடைகளில்..
எனினும் நாங்கள்
பெருமையாக(பொய்யாக) சொல்வோம்
வேற்றுமையில் ஒற்றுமை
இதுதான் எங்கள் இந்தியா..
Monday, June 28, 2010
Saturday, April 17, 2010
நியாயமா...மானிடா...?
மேகம் தந்தேன்
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..
உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...
செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..
இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..
தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..
உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...
செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..
இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..
தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?
Tuesday, March 16, 2010
வாழ்க்கையின் பாதையில்..
Thursday, March 4, 2010
என் இதய வானில்..
Thursday, February 25, 2010
அலைவீசும் கடலோரம்..
Wednesday, February 3, 2010
நீ வரும் வழியில்..
Sunday, January 31, 2010
ஒரு மரம் பேசுகிறது...

மனிதனே
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்
உதவுகிறாய் நீ...
நல்லவனோ கெட்டவனோ
நிழல் தருகிறேன் நான்...
மழைச்செல்வம் தேடித்தருவதும்
இயற்கை அழிவிலிருந்து
உன்னைக் காப்பதும்
நானில்லையா?
மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட
இன்னும் இன்னும்
நன்மைகள் பலப்பல...
எனினும் ...மானிடனே
அற்ப காரணத்துக்கெல்லாம்
அடியோடு வீழ்த்துகிறாயே...
சிசுக் கொலைதான்
பாவமா...
என்னைக் கொல்வது
பாவமில்லையா...?
Wednesday, December 23, 2009
நாளை முதல்..

நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.
நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.
இன்று கல்லூரியின் கடைசி நாள்..
Saturday, November 21, 2009
Sunday, November 15, 2009
மல்லிகையும் மட்டனும்
Sunday, November 8, 2009
Subscribe to:
Posts (Atom)











