மேகம் தந்தேன்
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..
உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...
செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..
இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..
தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?
Saturday, April 17, 2010
Tuesday, March 16, 2010
வாழ்க்கையின் பாதையில்..
Thursday, March 4, 2010
என் இதய வானில்..
Thursday, February 25, 2010
அலைவீசும் கடலோரம்..
Wednesday, February 3, 2010
நீ வரும் வழியில்..
Sunday, January 31, 2010
ஒரு மரம் பேசுகிறது...

மனிதனே
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்
உதவுகிறாய் நீ...
நல்லவனோ கெட்டவனோ
நிழல் தருகிறேன் நான்...
மழைச்செல்வம் தேடித்தருவதும்
இயற்கை அழிவிலிருந்து
உன்னைக் காப்பதும்
நானில்லையா?
மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட
இன்னும் இன்னும்
நன்மைகள் பலப்பல...
எனினும் ...மானிடனே
அற்ப காரணத்துக்கெல்லாம்
அடியோடு வீழ்த்துகிறாயே...
சிசுக் கொலைதான்
பாவமா...
என்னைக் கொல்வது
பாவமில்லையா...?
Wednesday, December 23, 2009
நாளை முதல்..

நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.
நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.
இன்று கல்லூரியின் கடைசி நாள்..
Subscribe to:
Posts (Atom)