Saturday, April 17, 2010

நியாயமா...மானிடா...?

மேகம் தந்தேன்
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..

உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...

செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..

இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..

தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?

Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் பாதையில்..


வாழ்க்கையின்
பாதையில்
வந்து போகின்றனர்
பலர்..

நீங்கா நினைவுகளை
நெஞ்சில்
விட்டுச் செல்கின்றனர்
சிலர்...

Thursday, March 4, 2010

என் இதய வானில்..


என் இதய வானில்
அன்பெனும் பறவைகள்..

என் இதய கடலில்
அன்பெனும் அலைகள்..

என் இதய தோட்டத்தில்
அன்பெனும் மலர்கள்..

என் இதய வீட்டில்
அன்பு நிறைந்த மனிதர்கள்..

Thursday, February 25, 2010

அலைவீசும் கடலோரம்..


அலைவீசும் கடலோரம்
அமரும்போதும்
உந்தன்
அருகாமை ஏக்கம்..

மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை
பார்க்கும்போதும்
உந்தன்
புன்னகைத் தாக்கம்..

உந்தன் பேச்சு
உந்தன் முகம் என்று
உள்ளம் முழுதும் உன்
நினைவுத் தேக்கம்..

காலை மாலை
செய்யும் செயல்களை
தினம்
தடுமாற வைக்கும்..

Wednesday, February 3, 2010

நீ வரும் வழியில்..


நீ
வரும் வழியில்
காத்திருக்கிறேன்..
என்னைப் போலவே
இங்குள்ள
செடிகளும்
மலர்களும்
மலரின் இதழ்களும்
உன் இதழ் சிரிப்பைக் காண…

Sunday, January 31, 2010

ஒரு மரம் பேசுகிறது...


மனிதனே
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்
உதவுகிறாய் நீ...
நல்லவனோ கெட்டவனோ
நிழல் தருகிறேன் நான்...

மழைச்செல்வம் தேடித்தருவதும்
இயற்கை அழிவிலிருந்து
உன்னைக் காப்பதும்
நானில்லையா?

மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட
இன்னும் இன்னும்
நன்மைகள் பலப்பல...

எனினும் ...மானிடனே
அற்ப காரணத்துக்கெல்லாம்
அடியோடு வீழ்த்துகிறாயே...
சிசுக் கொலைதான்
பாவமா...
என்னைக் கொல்வது
பாவமில்லையா...?

Wednesday, December 23, 2009

நாளை முதல்..


நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.

நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.

இன்று கல்லூரியின் கடைசி நாள்..