Thursday, February 25, 2010

அலைவீசும் கடலோரம்..


அலைவீசும் கடலோரம்
அமரும்போதும்
உந்தன்
அருகாமை ஏக்கம்..

மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை
பார்க்கும்போதும்
உந்தன்
புன்னகைத் தாக்கம்..

உந்தன் பேச்சு
உந்தன் முகம் என்று
உள்ளம் முழுதும் உன்
நினைவுத் தேக்கம்..

காலை மாலை
செய்யும் செயல்களை
தினம்
தடுமாற வைக்கும்..

Wednesday, February 3, 2010

நீ வரும் வழியில்..


நீ
வரும் வழியில்
காத்திருக்கிறேன்..
என்னைப் போலவே
இங்குள்ள
செடிகளும்
மலர்களும்
மலரின் இதழ்களும்
உன் இதழ் சிரிப்பைக் காண…

Sunday, January 31, 2010

ஒரு மரம் பேசுகிறது...


மனிதனே
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்
உதவுகிறாய் நீ...
நல்லவனோ கெட்டவனோ
நிழல் தருகிறேன் நான்...

மழைச்செல்வம் தேடித்தருவதும்
இயற்கை அழிவிலிருந்து
உன்னைக் காப்பதும்
நானில்லையா?

மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட
இன்னும் இன்னும்
நன்மைகள் பலப்பல...

எனினும் ...மானிடனே
அற்ப காரணத்துக்கெல்லாம்
அடியோடு வீழ்த்துகிறாயே...
சிசுக் கொலைதான்
பாவமா...
என்னைக் கொல்வது
பாவமில்லையா...?

Wednesday, December 23, 2009

நாளை முதல்..


நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.

நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.

இன்று கல்லூரியின் கடைசி நாள்..

Saturday, November 21, 2009

நிலா



ஜோடி ஒன்று
தேடாத
தனிப் பறவை.

Sunday, November 15, 2009

மல்லிகையும் மட்டனும்



நடக்கும் பாதையில்
மல்லிகையோ ரோஜாவோ
மிதிக்காமல் செல்கிறோம்..

சிறிய எறும்புதான்
கடிக்காது எனினும்
விலகிச் செல்கிறோம்..

ஆட்டுக்குட்டியை
ஆசையாய் வருடி
உணவு தருகிறோம்..

ஆனாலும் ஆசையாய்
சாப்பிடுகிறோம்
மட்டனும் சிக்கனும்..

Sunday, November 8, 2009

மலை..


முகில் தேவதை
துயில் கொள்ளும்
படுக்கையறை...