Thursday, November 5, 2009

ஏன்..

காலையில்
பூக்கள் மலர்ந்திடும்
புதுச்சோலையில் உலவிடலாம்..

சிட்டுக் குருவிகளுக்கு
உணவு தந்திடலாம்
அவை கொத்திதின்பதை
பார்த்து ரசித்திடலாம்..

தூரல் போடும்
சாரல் மழையில்
மெல்ல நனைந்திடலாம்..

மாலையில்
மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு
வானத்திற்கு
மனதை தன்திடலாம்..

இரவின் நிலவில்
மெல்லிய இசை கேட்டு
உறங்கிடலாம்..

இத்துணை இன்பம்
இப்பூமியில் கொட்டிக்கிடக்க
கத்திகளுடனும்
துப்பாக்கிகளுடனும்
அலைவதேன் மானிட இனமே..

No comments: